பராசர மகரிஷி நாபஸ யோகத்தில் சூரியன் முதல் சனி வரையிலான 7 கிரஹங்களை கொண்டு 32 யோகங்கள் கூறியுள்ளார். இதில் ராகு, கேது விடுபட்டுள்ளது.

அதற்கு சிலர் பராசரர் காலத்தில் ராகு, கேது கண்டுபிடிக்க படவில்லை எனவெல்லாம் கூறுகின்றனர். இது தவறு. அப்படியென்றால் பராசர ஹோரையில் பல அத்தியாயத்தில் ராகு, கேதுவை பற்றி பல குறிப்புகள் காணப்படுகின்றன.

ராகு, கேது விற்கு விம்சோத்தரி தசையில் வருடம் கொடுத்த பராசர மகரிஷி ஏன் ராகு, கேது வை நாபஸ யோகத்தில் வைக்கவில்லை என்பதற்கு சரியான காரணம் நாபஸ என்ற வார்த்தைக்கு ”கண்ணால் பார்க்கக்கூடிய வான மண்டல அமைப்பு” அல்லது ”கண்களுக்கு தெரிகிற ஆகாய பொருள்” என்ற அர்த்தமாகும்.
கண்களால் பார்க்கும்போது ராகு கேது தெரிவதில்லை. இவை சாயா கிரஹம் ஆகும். சூரியன், சந்திரன், பூமி ஒன்றுக்கொன்று நேர்க்கோட்டில் நிற்கும் நிலையிலிருந்து ராகு கேது வை கணிக்கும் முறையை பராசர மகரிஷி தன்னுடைய பராசர ஸம்ஹிதாவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கண்ணால் பார்க்கும்போது ராகு, கேது தெரியவில்லை என்பதால் தான் அதனை விடுத்துள்ளார். ஏனெனில் இது நாபஸ யோகம் அல்லது கண்களால் காணக்கூடிய வான் யோகம் என்பதால் தான் ராகு, கேதுவை விடுத்துள்ளனர் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Related Posts

ஜோதிஷத்தில் கிரகங்கள் குறிப்பிடும் சுவைகளும், பரிகாரமும்

Parasari Dr. B. Ayyappa Sharma
சூரியன் .. காரம் சந்திரன் .. உவர்ப்பு செவ்வாய் .. கசப்பு புதன் .. பல சுவை குரு .. இனிப்பு சுக்கிரன் .. புளிப்பு சனி...
Read More

நட்சத்திரங்கள் குறிப்பிடும் உடலின் பாகங்கள், பாஷாணங்கள், மூலிகைகள், வடிவங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
நக்ஷத்திரம் உடல் பாகம் பாஷாணம் வடிவம் அசுவினி புறங்கால் ஆட்டுப்பு குதிரை முகம் பரணி உள்ளங்கால்கள் மாட்டுப்பு அடுப்பு(முக்கோண வடிவம்) கார்த்திகை தலை குதிரையுப்பு -கற்றை ரோகினி...
Read More

கிரஹங்கள் ஆதிக்கும் செலுத்தும் கால அளவு.

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்யதுர்காவின் கருணையினாலே… அயந க்ஷண வார ர்து மாஸ பக்ஷ ஸமா த்விஜ । ஸூர்யாதீநாம் க்ரமாஜ்ஜ்ஞேயா நிர்விஶகம் த்விஜோத்தம ॥ [பராசர ஹோரை அத்தியாயம் 3...
Read More