பராசர மகரிஷி நாபஸ யோகத்தில் சூரியன் முதல் சனி வரையிலான 7 கிரஹங்களை கொண்டு 32 யோகங்கள் கூறியுள்ளார். இதில் ராகு, கேது விடுபட்டுள்ளது.

அதற்கு சிலர் பராசரர் காலத்தில் ராகு, கேது கண்டுபிடிக்க படவில்லை எனவெல்லாம் கூறுகின்றனர். இது தவறு. அப்படியென்றால் பராசர ஹோரையில் பல அத்தியாயத்தில் ராகு, கேதுவை பற்றி பல குறிப்புகள் காணப்படுகின்றன.

ராகு, கேது விற்கு விம்சோத்தரி தசையில் வருடம் கொடுத்த பராசர மகரிஷி ஏன் ராகு, கேது வை நாபஸ யோகத்தில் வைக்கவில்லை என்பதற்கு சரியான காரணம் நாபஸ என்ற வார்த்தைக்கு ”கண்ணால் பார்க்கக்கூடிய வான மண்டல அமைப்பு” அல்லது ”கண்களுக்கு தெரிகிற ஆகாய பொருள்” என்ற அர்த்தமாகும்.
கண்களால் பார்க்கும்போது ராகு கேது தெரிவதில்லை. இவை சாயா கிரஹம் ஆகும். சூரியன், சந்திரன், பூமி ஒன்றுக்கொன்று நேர்க்கோட்டில் நிற்கும் நிலையிலிருந்து ராகு கேது வை கணிக்கும் முறையை பராசர மகரிஷி தன்னுடைய பராசர ஸம்ஹிதாவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கண்ணால் பார்க்கும்போது ராகு, கேது தெரியவில்லை என்பதால் தான் அதனை விடுத்துள்ளார். ஏனெனில் இது நாபஸ யோகம் அல்லது கண்களால் காணக்கூடிய வான் யோகம் என்பதால் தான் ராகு, கேதுவை விடுத்துள்ளனர் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Related Posts

மூன்றாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் எற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
மூன்றாம் பாவத்தில் சூரியன் இருந்தால் எற்படும் பலன்கள்: வலிமையானவர், உடன் பிறந்தவர்களுக்கு தீங்கு செய்தல், நற்குணங்களுள்ளவர், பண்டிதர், தீய மக்களை அடக்குவார். மூன்றாம் பாவத்தில் சந்திரன் இருந்தால்...
Read More

மருத்துவ ஜோதிடத்தில் கபம், பித்தம் மற்றும் வாதம்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு மிக முக்கியம். ஜோதிடர்களிடம் வருகின்ற பொழுது அவர்கள் எதிர்பார்ப்பில் தன் உடல்நிலையைப் பற்றியது ஒன்றாக இருக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற...
Read More

சூரியன்-ஜோதிஷி பார்வை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜயதுர்காவின் கருணையினாலே!! சூரிய மண்டலத்திலுள்ள அனைத்து கோள்களையும் சூரியன் ஒருங்கிணைத்து ஒரு சீரான சுழற்சிக்கு வழி ஏற்படுத்துகிறது. அதுபோலவே நாட்டை ஆள்பவர்களும் மக்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின்...
Read More