ஆறாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான சிற்றின்ப வேட்கை, செல்வந்தர், புகழ்பெற்ற குணத்துடன் இருப்பார், அரசர் அல்லது அதற்கினையானவர், படைத்தலைவராகவும் இருப்பார்.

ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அதிகபடியான பகைவர்கள் உடையவர், கடினமானவர், வலிமை குன்றியிருத்தல், சிற்றின்ப வேட்கை, வயிறு நோயினால் பாதிக்கப்படுதல், தேய்பிறை சந்திரனாக இருந்தால் குறைந்த ஆயுள் உள்ளவர்.

ஆறாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சிற்றின்ப வேட்கை, மிகுதியான வெப்ப உடல், உயரமானவர், வலிமையுள்ளவர்கள், தனது உறவினர்களை வெற்றி கொள்பவர், முக்கியமானவர்.

ஆறாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

வாதம் செய்பவர், பிரச்சனைகள் மற்றும் கலகங்களால் எப்போதும் வெற்றி காண்பவர், நோயாளி, சோம்பல் உள்ளவர், சினமின்மை, கடினமான வார்த்தைகள், பெரும்பாலும் தோல்வியையே சந்திப்பவர், வெற்றியடைய போராடுபவர்.

ஆறாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மந்திரம் மற்றும் வெகுமானங்களில் திறமையானவர், தோல்வியடைதல், பெண்களிடம் அச்சம் கொள்பவர், சோம்பல், நோய் உள்ளவர், பகைவரை வெல்லுதல், புகழுடையவர்.

ஆறாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெண்களுக்கு விருப்பம் இல்லாதவர், கூடுதல் பகைவர்கள் உள்ளவர், சுகவாழ்க்கை எதுவும் இல்லாதவர், துக்கம், தாழ்மையான குணம் உடையவர், எதிரிகளால் ஏமாற்றப்படுபவர்.

ஆறாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான சிற்றின்ப வேட்கை, கட்டுடல், வீரம் உள்ளவர், கூடுதலாக உண்ணுபவர், தீய குணம் உள்ளவர், பல அமைப்பில் பகைவர்களை அழிப்பவர், இவரது செயல்பாடுகளை கண்டு பகைவர்கள் அஞ்சுவர்.

ஆறாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நீண்ட ஆயுளும், செல்வமும் தரும்

ஆறாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெருந்தன்மையானவர், அநேக நற்குணங்கள் உடையவர். அழியாப் புகழ் உடையவர், உறுதியும், அந்தஸ்தும் உடையவர். எதிரிகளை வீழ்த்துபவர். தனது விருப்பங்களை நிறைவேற்றுபவர்.

Related Posts

ஏழாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: மகாலட்சுமி அருளில்லாதவர், எப்பணியிலும் முதலில் தோல்வி, நோயாளி, தூய்மையற்ற உடலமைப்பு உள்ளவர், அரசர் (அ) அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்படுதல்,...
Read More

மூலிகை மருந்து செய்ய உகந்த நேரம்

Parasari Dr. B. Ayyappa Sharma
மாதம்: சித்திரை, வைகாசி மிகவும் உகந்ததது. அடுத்தபடியாக ஆனி, ஆடி மாதங்களில் சுமாரான பலன்களைத் தரக் கூடியது. மற்ற மாதங்களில் மருந்துகள் செய்தால் தீமை பயக்கும். கிழமை:...
Read More

மூன்றாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் எற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
மூன்றாம் பாவத்தில் சூரியன் இருந்தால் எற்படும் பலன்கள்: வலிமையானவர், உடன் பிறந்தவர்களுக்கு தீங்கு செய்தல், நற்குணங்களுள்ளவர், பண்டிதர், தீய மக்களை அடக்குவார். மூன்றாம் பாவத்தில் சந்திரன் இருந்தால்...
Read More