ஆறாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான சிற்றின்ப வேட்கை, செல்வந்தர், புகழ்பெற்ற குணத்துடன் இருப்பார், அரசர் அல்லது அதற்கினையானவர், படைத்தலைவராகவும் இருப்பார்.

ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அதிகபடியான பகைவர்கள் உடையவர், கடினமானவர், வலிமை குன்றியிருத்தல், சிற்றின்ப வேட்கை, வயிறு நோயினால் பாதிக்கப்படுதல், தேய்பிறை சந்திரனாக இருந்தால் குறைந்த ஆயுள் உள்ளவர்.

ஆறாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சிற்றின்ப வேட்கை, மிகுதியான வெப்ப உடல், உயரமானவர், வலிமையுள்ளவர்கள், தனது உறவினர்களை வெற்றி கொள்பவர், முக்கியமானவர்.

ஆறாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

வாதம் செய்பவர், பிரச்சனைகள் மற்றும் கலகங்களால் எப்போதும் வெற்றி காண்பவர், நோயாளி, சோம்பல் உள்ளவர், சினமின்மை, கடினமான வார்த்தைகள், பெரும்பாலும் தோல்வியையே சந்திப்பவர், வெற்றியடைய போராடுபவர்.

ஆறாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மந்திரம் மற்றும் வெகுமானங்களில் திறமையானவர், தோல்வியடைதல், பெண்களிடம் அச்சம் கொள்பவர், சோம்பல், நோய் உள்ளவர், பகைவரை வெல்லுதல், புகழுடையவர்.

ஆறாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெண்களுக்கு விருப்பம் இல்லாதவர், கூடுதல் பகைவர்கள் உள்ளவர், சுகவாழ்க்கை எதுவும் இல்லாதவர், துக்கம், தாழ்மையான குணம் உடையவர், எதிரிகளால் ஏமாற்றப்படுபவர்.

ஆறாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான சிற்றின்ப வேட்கை, கட்டுடல், வீரம் உள்ளவர், கூடுதலாக உண்ணுபவர், தீய குணம் உள்ளவர், பல அமைப்பில் பகைவர்களை அழிப்பவர், இவரது செயல்பாடுகளை கண்டு பகைவர்கள் அஞ்சுவர்.

ஆறாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நீண்ட ஆயுளும், செல்வமும் தரும்

ஆறாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெருந்தன்மையானவர், அநேக நற்குணங்கள் உடையவர். அழியாப் புகழ் உடையவர், உறுதியும், அந்தஸ்தும் உடையவர். எதிரிகளை வீழ்த்துபவர். தனது விருப்பங்களை நிறைவேற்றுபவர்.

Related Posts

அஷ்டமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma
அஷ்டமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் மனைவி உயிருடன் இருக்கும் காலத்திலேயோ அல்லது அவளுக்கு மரணம் எற்படுவதாலோ இரண்டாவது விவாகம் ஒன்று நடைபெறலாம். அந்நியரால் பொருள் நஷ்டங்கள் உண்டாகும்....
Read More

கிரஹங்கள் குறிப்பிடும் நோய்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
கிரஹங்கள் குறிப்பிடும் நோய்கள் அண்டத்தில் உள்ளதே பிண்டம் பிண்டத்தில் உள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும் போதே- என்ற சட்டமுனியின் வாக்கின்படி உடலுக்கும் உலகத்திற்கும்...
Read More

மூலிகை மருந்து செய்ய உகந்த நேரம்

Parasari Dr. B. Ayyappa Sharma
மாதம்: சித்திரை, வைகாசி மிகவும் உகந்ததது. அடுத்தபடியாக ஆனி, ஆடி மாதங்களில் சுமாரான பலன்களைத் தரக் கூடியது. மற்ற மாதங்களில் மருந்துகள் செய்தால் தீமை பயக்கும். கிழமை:...
Read More