மூன்றாம் பாவத்தில் சூரியன் இருந்தால் எற்படும் பலன்கள்:

வலிமையானவர், உடன் பிறந்தவர்களுக்கு தீங்கு செய்தல், நற்குணங்களுள்ளவர், பண்டிதர், தீய மக்களை அடக்குவார்.

மூன்றாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் எற்படும் பலன்கள்:

மகிழ்ச்சி, வீரம், கல்வி, ஆசை, உணவு பொருட்கள் முதலியவற்றை தேடும் பழக்கமுள்ளவர், சந்திரன் பௌர்ணமியால் இருப்பின் மேற்சொன்னவைகள் முற்றிலும் நடைபெறும். தேய்பிறையினால் பலன்கள் சற்றே குறைவாகதான் இருக்கும்.

மூன்றாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் எற்படும் பலன்கள்:

வீரம், பிற மனிதர்களால் பகைக்கபடாதவர், உடன்பிறப்புகளை இழப்பவர், எப்போதும் மகிழ்ச்சி உடையவர், பற்பல குணங்களுக்கு இருப்பிடமாக திகழ்பவர், புகழ் பெற்றவர்.

மூன்றாம் பாவத்தில் புதன் இருந்தால் எற்படும் பலன்கள்:

துன்பம் அடைதல், ஏழ்மை, திறமை, உடன்பிறப்பு, பற்பலகபடம், (தந்திரம்) பொய்கள், சபலமானவர், எதற்கும் அஞ்சுபவராக இருப்பார்.

மூன்றாம் பாவத்தில் குரு இருந்தால் எற்படும் பலன்கள்:

எல்லா செயல்களிலும் தோல்வி, கருமி, உடன் பிறந்தவர்கள் மூலம்தான் வெற்றி காண்பவர், குளிர்ச்சியால் ஏற்படும் நோய், பெண்களிடம் அச்சம் கொள்ளாதவர், பாவ தொழில் செய்தல், இவரது செயலை மற்றவர்கள் புறக்கனித்தல்.

மூன்றாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் எற்படும் பலன்கள்:

இன்பமும், செல்வமும் உள்ளவர், பெண்களிடம் அஞ்சுபவர், கருமி, மகிழ்ச்சியற்றவர் அதிர்ஷடம், வீடு மற்றும் அதற்குரிய பொருட்கள் உடையவர்.

மூன்றாம் பாவத்தில் சனி இருந்தால் எற்படும் பலன்கள்:

தூய்மை அற்றவர், குலத்திற்கு பொருந்தாத செயல்களை செய்தல், சோம்பல் உள்ளவர்கள் மற்றும் பொறுப்பற்ற நபர்களுடன் சேர்ந்திருத்தல், வீரன், தானம் செய்பவர், எதிரிகளை (சகோதரர்கள்) விரட்டி அடிப்பர்.

மூன்றாம் பாவத்தில் ராகு இருந்தால் எற்படும் பலன்கள்:

தன்மானம் உடையவர். சகோதரரிடம் பகை உள்ளவர், நீண்ட ஆயுள், செல்வம், உறுதியான மனம் உடையவர்.

மூன்றாம் பாவத்தில் கேது இருந்தால் எற்படும் பலன்கள்:

நீண்ட ஆயுள், மனைவி, மக்கள், செல்வம், நல்ல உணவு, வலிமை யாவும் உண்டு. இவர் தனது சகோதரர்களில் ஒருவரை இழக்க நேரிடும்.

Related Posts

கிரஹங்களின் திக் பல சூட்சுமம்.

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜயதுர்காவின் கருணையினாலே!!! திக் பலத்தில் புதுசாக அப்படி என்ன இருக்கிறது இதுதான் அனைத்து ஜோதிஷ புத்தகங்களிலும் உள்ளதே என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. இருந்தபோதிலும் இதில்...
Read More

மூலிகை மருந்து செய்ய உகந்த நேரம்

Parasari Dr. B. Ayyappa Sharma
மாதம்: சித்திரை, வைகாசி மிகவும் உகந்ததது. அடுத்தபடியாக ஆனி, ஆடி மாதங்களில் சுமாரான பலன்களைத் தரக் கூடியது. மற்ற மாதங்களில் மருந்துகள் செய்தால் தீமை பயக்கும். கிழமை:...
Read More

கிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது?

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி...
Read More