நான்காம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர் அற்றவர், வாகன சுகம் இல்லாதவர், மனதில் துன்பம், தந்தை, செல்வம் மற்றும் வீட்டிற்கு தீங்கு செய்பவர், தீய குணமான தலைவன் (அ) அரசனை வணங்குதல்.

நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர்கள், வீடுகள், அதற்குண்டான பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளவர், தானம், தர்மம் செய்தல், பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல், மிகுதியான இன்பமும், துன்பமும் இல்லாதவர்.

நான்காம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர்கள், வீடு, செல்வம், வாகனம், மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் இல்லாதவர், மிகுதியான துன்பமுள்ளவர், குடும்பத்தை விடுத்து பிறர் வீட்டில் வசிப்பவர்.

நான்காம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பண்டிதர், பெருஞ்செல்வம், வாகனம், பற்பல பொருட்களும், உறவினர்களும் உள்ளவர், சோதிட அனுபவம் உள்ளவர், ஒவ்வொரு நாளும் படிப்படியாக முன்னேறி கொண்டே இருப்பர்.

நான்காம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர்கள், வீடு மற்றும் அதற்கேற்ற பொருட்கள், வாகனங்கள், இன்பம், அறிவு, அனுபவ இன்பம், செல்வம், தலைவராகுதல் போன்ற பலன்களும், பகைவர்களை வெற்றி கொள்ளும் தன்மையும் ஏற்படும்.

நான்காம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நல்ல நண்பர்கள், உறவினர்கள், வாகனம், புகழ், செல்வம், அதிர்ஷடமுள்ளவர், ஏழ்மை இல்லாதவர்.

நான்காம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர் இல்லாதவர், வீடு, வாகனம், செல்வம், திறமை, இன்பம் ஆகிய இவை இல்லாதவர், மனதில் துக்கம் உடையவர், இளமையில் நோயினால் பாதிப்பு உள்வர், நகங்களையும், உடலில் மயிர்களையும் வளர்ப்பவர், சுகமற்றவர்.

நான்காம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அறிவற்றவர், துக்கம் உடையவர், குறைவான ஆயுள் கொண்டவர், மகிழ்ச்சி இல்லாதவர்.

நான்காம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்
:
நிலம், வாகனம், தாய், மகிழ்ச்சி எல்லாம் பாதிப்படையும். தன்னிடம் விட்டு நீங்கி, வெளி இடத்தில் பிறர் தயவில் வாழ்பவர்.

Leave A Comment

fourteen + 20 =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்காவினை வணங்கி, கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார். இதன் பொருள். உட்ச கிரஹம் முழு பலனையும், மூலத்திரிகோண கிரஹம் முக்கால் பலத்தினையும், ஆட்சி கிரஹம் பாதிபலத்தினையும், நட்பு கிரஹம் கால் பலத்தினையும், சமம் கிரஹம் எட்டில் ஒரு பங்கு பலத்தினையும், நீட்ச/பகை கிரஹம் […]

Read More

கிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது?

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும். சூரியன்–22 வயது சந்திரன்–24 வயது செவ்வாய்–28 […]

Read More