ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மகாலட்சுமி அருளில்லாதவர், எப்பணியிலும் முதலில் தோல்வி, நோயாளி, தூய்மையற்ற உடலமைப்பு உள்ளவர், அரசர் (அ) அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்படுதல், தண்டனை அனுபவித்தல், துன்பம் உள்ளவர், நாடோடி வாழ்க்கை, பெண்களை தூற்றுபவர்.

ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அழகு, இன்பம், கட்டுடல், அதிக இன்பம் விருப்பமுள்ளவர், தேய்பிறை சந்திரனால் ஏழ்மை உள்ளவர், சிற்றின்பத்தால் பெருந்துன்பம் அனுபவித்தல்.

ஏழாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மனைவி (அ) கணவன் பிரிவு, இறப்பு, மனைவியினால் துன்பம் அனுபவித்தல், நோயாளி, அலைபவர், பற்பல துன்பமுடையவர், பாவி, லட்சுமி அருளில்லாதவர், மெலிந்த உடல் அமைப்பு உடையவர்.

ஏழாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அறிவு, ஆற்றல், அழகு உள்ளவர், அலங்காரம் உள்ளவர், நடுத்தர குடும்பத்தில் பிறந்த மனைவியுள்ளவர், மேலும் கலகத்தில் நாட்டமும், மிகுதியான பணம் செல்வமும் உடைய மனைவி அமைவாள்.

ஏழாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அதிர்ஷ்டமும், அழகும் உடைய மனைவி, தந்தையை விட மேன்மையான குணம் உள்ளவர், நன்றாக உறையாடுபவர், கவிஞர், முக்கியமானவர், புலவர், மிகுதியான புகழ் உடையவர்.

ஏழாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மேன்மையான அழகுள்ள மனைவி அமைவாள், மனைவியின் இன்பத்தை அனுபவித்தல், கூடுதல் அழகுள்ளவர், கலகமின்மை, உயர்ந்த அந்தஸ்து உடையவர், பெருஞ்செல்வம் உடையவர், பணக்காரர்.

ஏழாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சிறிது கூட இன்பமற்றவர், நோயுடையவர், மனைவியை பிரிபவர், மற்றும் இழப்பவர், செல்வமின்மை, கெடுதியான அலங்காரம், பாபர், இழிவான செயல்களை செய்பவர், பாப தொழில் புரிபவர்.

ஏழாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெண்களால் தனது செல்வத்தையும், வலிமையையும் இழப்பார். உற்றார் உறவினரைப் பிரிவார். அற்பமான புத்தியும், தனது எண்ணத்தின்படி வாழ்பவர், வேறுயாரும் உதவ மாட்டார்கள்.

ஏழாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அவமரியாதை உண்டு, இழிந்த பெண்கள் சேர்க்கை ஏற்படும். மனைவியை இழப்பர், வயிற்றில் நோய் உண்டு. வீரியம் குறைவானவர்.

Leave A Comment

four − 1 =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்காவினை வணங்கி, கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார். இதன் பொருள். உட்ச கிரஹம் முழு பலனையும், மூலத்திரிகோண கிரஹம் முக்கால் பலத்தினையும், ஆட்சி கிரஹம் பாதிபலத்தினையும், நட்பு கிரஹம் கால் பலத்தினையும், சமம் கிரஹம் எட்டில் ஒரு பங்கு பலத்தினையும், நீட்ச/பகை கிரஹம் […]

Read More

கிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது?

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும். சூரியன்–22 வயது சந்திரன்–24 வயது செவ்வாய்–28 […]

Read More