ஜ்ய துர்காவின் பாதம் பணிந்து…
யோகம் – ஆகாச தத்துவம் – குரு – ஒத்துழைத்தல் & உடனுழைத்தல்
யோகம் என்றால் சேர்த்தல், இணைத்தல் என்றும், திதி என்றால் பிரித்தல், கழித்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.
சந்திரனின் பாகையிடமிருந்து சூரியனின் பாகையை கூட்டினால் யோகம் ஆகும்.
சந்திரனின் பாகையிலிருந்து சூரியனின் பாகையினை கழித்தால் அது திதி ஆகும்.
சந்திர சூரிய பாகையினை கூட்டி யோகமானதால் இதற்கு தேவ குருவான பிருஹஸ்பதியே அதிபதியாவார்.
சந்திர சூரிய பாகையினை கழித்து திதி வந்ததால் இதற்கு அசுர குருவான சுக்கிராச்சாரியரே அதிபதியாவார்..
சரி யோகத்திற்கு அதிபதியான குரு ஆகாச தத்துவம் உடையது. எனவே பஞ்சாங்கத்தில் ஒன்றாகிய யோகம் ஆகாசமாக கொள்ளவேண்டும்.
மேலும் இதில் ஒரு சுவாரசியமான தகவலும் உள்ளது. என்னவெனில் யோகத்தின் நாதனை கணக்கிட அனைவரும் பூசம் நக்ஷத்திரத்திலிருந்தே ஆரம்பமாக கொண்டு யோகி நாதனை அறிவர்.
யோகம் ஆகாச தத்துவமாகி குருவினை குறிப்பிடுகிறது.. பூச நக்ஷத்திரம் தான் குரு பகவான் உட்சம் அடையக்கூடிய நக்ஷத்திரம் ஆகும். கடக ராசியின் 5 பாகையில் பூச நக்ஷத்திரத்தில் தோராயமாக 2வது பாகையில் குரு அதி உட்சம் அடைகிறார்.
மேலும் 27 நக்ஷத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதி உண்டு. அதில் பூசம் நக்ஷத்திரத்தின் அதிபதி பிருஹஸ்பதியே ஆவார்.
அதனாலயே முதல் யோகமான விஷ்கும்பம் முதல் 27 யோகத்திற்கும் அதனதன் நாதன் ஆனது பூசம் நக்ஷத்திரத்தினை முதலாவதாக கொண்டு கண்டுபிடிக்கப்படுகிறது உதாரணமாக விஷகும்பம் யோகத்திலிருந்து 6 வது யோகம் அதிகண்டம் ஆகும்..இதன் அதிபதியினை அறிய பூசம் நக்ஷத்திலிருந்து 6 வது நக்ஷத்திரத்தினை எண்ணினால் கிடைக்கும் ஹஸ்த நக்ஷத்திர அதிபதியான சந்திரனே அதிகண்டத்தின் அதிபதி ஆவார்… இதனைப்போல ஒரு யோகத்தின் அதிபதியை அறிய விஷகும்பத்தில் இருந்து எண்ணி வரும் தொகையை பூசம் நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணி வரும் நக்ஷத்திர அதிபதியே யோக அதிபதி அதாவது யோகி கிரஹம் ஆவார்….
27 யோகத்திற்கும் பெயர் விளக்கமும், அதற்குண்டான யோகி கிரஹம் எது எனவும் அடுத்த பதிவில் காண்போம்.

Related Posts

ஏழாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: மகாலட்சுமி அருளில்லாதவர், எப்பணியிலும் முதலில் தோல்வி, நோயாளி, தூய்மையற்ற உடலமைப்பு உள்ளவர், அரசர் (அ) அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்படுதல்,...
Read More

எட்டாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
எட்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: கண்களில் பாதிப்புள்ளவர், மக்கட்பேறு, செல்வமும் இழத்தல், குறைந்த ஆயுள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் பிரிவு, அடிக்கடி துன்பபடுதல். எட்டாம்...
Read More

பஞ்சமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஐந்தாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் தன் சொந்த முயற்சியாலும் தாயாதிகள் ஆதரவாலும் முன்னுக்கு வருவான் இரகசியங்களை அறியக்கூடிய சாமர்த்தியமும் திறமையும் உண்டாவதால் சோதிடம் மாந்திரீகம் போன்றவற்றில்...
Read More