பத்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான திறமை, வீரம், செல்வம், வாகனம், உறவினர், மக்கட்பேறு உள்ளவர், தொடங்குகின்ற தொழில்களில் வல்லமையும், புகழும் பெயரும் உண்டு.

பத்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

எப்போதும் துன்பமின்மை, ஒரே செயலில் முழுக்கவனமும் செலுத்துதல், உடனுக்குடன் செயல்களை செய்து முடித்தல், செல்வ பெருக்கம், கூடுதல் வலிமையும், வீரராகவும், இரக்க குணமுள்ளவராகவும் இருப்பவர்.

பத்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அனைத்து செயல்களிலும் மகிழ்ச்சியுடன் காணப்படுதல், வீரம், மற்றவரால் எதிர்க்கப்படாதவர், முக்கியமான மனிதர்களால் சகவாசம் செய்பவர், மக்கட்பேறு, இன்பம், பெரும்புகழ் உடையவர்.

பத்தாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மேன்மையான அறிவுடையவர், செயல்களில் முழு ஈடுபாடு தொடங்குகின்ற செயலை பூர்த்தி செய்தல், வீரர், உண்மையுடையவர், அலங்கரித்து கொள்வதில் விருப்பமுள்ளவர், இன்பமுடையவர்.

பத்தாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தொடங்கிய செயலை விருப்பம் போல் பூர்த்தி செய்தல், அனைத்து வசதிகளுடன் கூடுதல் நன்மையும், இன்பமும், செல்வமும், மக்களும், சுகபோகமும், வாகனங்களும், புகழும் உடையவர்.

பத்தாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அறிவாளி, புகழுடையவர், கௌரவம் மற்றும் பற்பல தொழில்கள் மூலம் ஈட்டப்பட்ட பொருளும் இன்பமும், மனைவியும் மக்கட்பேறும் உள்ளவர், கவரக்கூடியவர், கலைத்துறையில் பிரகாசிப்பவர்.

பத்தாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வந்தர், புலவர், வலிமையுள்ளவர், அமைச்சர் அல்லது ஒரு நிர்வாக தலைவராக இருப்பார், சங்கம், கிராமம், நகரம், மற்றும் நாட்டிற்க தலைமை தாங்குபவர், சிறந்த நிர்வாகி

பத்தாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

புகழ் உடையவர், அச்சம் இல்லாதவர். குழந்தைகள் அதிகமாக இராது, பிறர் செயல்களில் ஈடுபடுபவர். நற்செயல் ஏதும் செய்யாதவர்.

பத்தாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நற்செயல்களில் தடை உள்ளவர். தூய்மை இல்லாதவர். தீய செயல் புரிபவர். தைரியம், புகழ், ஆற்றல் உடையவர்.

Leave A Comment

one + seventeen =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்காவினை வணங்கி, கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார். இதன் பொருள். உட்ச கிரஹம் முழு பலனையும், மூலத்திரிகோண கிரஹம் முக்கால் பலத்தினையும், ஆட்சி கிரஹம் பாதிபலத்தினையும், நட்பு கிரஹம் கால் பலத்தினையும், சமம் கிரஹம் எட்டில் ஒரு பங்கு பலத்தினையும், நீட்ச/பகை கிரஹம் […]

Read More

கிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது?

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும். சூரியன்–22 வயது சந்திரன்–24 வயது செவ்வாய்–28 […]

Read More