பதினொன்றாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் தன் பெயர் புகழ் முதலானவற்றைக் கொண்டே சம்பாத்தியங்கள் உண்டாவதும் மிகவும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கையும் நல்ல குணமும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பரந்த நோக்கமும் நாவன்மையும் எழுத்து பேச்சுத் திறமைகளால் பொருள் லாபங்களும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பந்தயசூதாட்ட வியாபாரங்களில் லாபங்களும் புதையல் கிடைத்தது போல் சொத்துக்கள் வந்து சேர்வதும் தன் வாக்கினாலேயே லாபங்களை அடைவதும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். தானாக பொருள் வந்து சேரும். தீர்த்த யாத்திரை மகான்களின் சேர்க்கை முதலியன உண்டாகும். சகோதரர்களுக்கு லாபங்கள் உண்டாகும். ஆலயங்களைக் கட்டுதல், அற நிலையங்களை ஸ்தாபித்தல் போன்ற பொறுப்புக்களையும் ஏற்று நிதி திரட்டி அவற்றை நடத்தி வைக்கும் படியான பாக்கியமும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை நடத்தினால் கல்வியால் மிக உயர்ந்த பதவியை அடைதல், ஞானியாதல் எல்லாவிதங்களிலும் சுகசௌக்கியங்கள் நிறைந்த வாழ்க்கையும் சகல நன்மைகளும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் ஐந்தாமிடத்தில் இருந்து தசை நடத்தினால் புத்திர லாபங்கள் ஏற்படுவதும், தனக்குத் தன் புத்திரர்களால் லாபங்கள் உண்டாவதும் மேலும் மேலும் சொத்த சுகங்கள் விருத்தியாவதும் சகலசித்திகளும் நடைபெறும் மாந்திரீகப் ஜோதிடம் போன்ற வித்தைகளும் அறியும் சக்தியும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் பகைவரால் தொல்லைகளும் அன்னிய தேசத்தில் அன்னியரிடம் கைகட்டி பிழைக்கும் படியான நிலைமையும் சொத்து சுகம் இல்லாத பரதேசி போன்ற வாழ்க்கையும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை நடத்தினால் மனைவிக்கு மரணமும் இரண்டாவது அல்லது மூன்றாவது விவாகம் ஏற்படும். அன்னிய தேசங்களில் சஞ்சரிப்பதன் மூலம் லாபங்கள் உண்டாகும். அதிகமான காமவேட்கையும் அன்னிய ஸ்திரீகளை அடைவதும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தன்னுடைய சக்தி யுக்தி உழைப்பு முதலியவற்றால் அன்னியரே லாபம் அடைவார்கள் தனக்கு அற்ப லாபங்களே உண்டாகும். குடும்பத்தில் மனைவிக்கு அடங்கி நடக்கும் படியான நிலைமையும் உண்டாகும். எப்பொழுதும் எதற்காவது ஏங்கிக் கொண்டே இருக்கும கேவலமான வாழ்க்கை உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தான தர்மங்கள் யாக எக்கியங்கள் செய்து புண்ணிய லாபங்களை அடைவதும் அரசர்களாலும் பிரபுக்களாலும் பூஜிக்கத் தக்க நிலைமையும் தர்மம் தவறாத வாழ்க்கையும் மதியூகமும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தொழில் மேதையாக விளங்குவதும் தான் கூறும் ஆலோசனைகளுக்காகவே லாபங்களை அடைதலும் தொழிற் திறமைக்காக எல்லோராலும் மதிக்கப்படத்தக்க நிலைமையும் சகல சுகங்களும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பலவிதமான லாபங்களும் சுகபாக்கியங்களும் தாமே வந்தடைதலும் அழகிய இளம்பெண்களின் சகவாசமும் கலைத்திறமைகளும் கல்வியால் பிரகாசமும் உண்டாகும்.

பதினொன்றாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் அதிகமான காதல் வேட்கையும் பெண்களை சுலபமாக வசீகரம் செய்யும் சக்தியும் காமலீலைகளால் பொருள் விரயமும் உண்டாகும்.

Leave A Comment

eighteen − one =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

மூலிகை மருந்து செய்ய உகந்த நேரம்

Parasari Dr. B. Ayyappa Sharma

மாதம்: சித்திரை, வைகாசி மிகவும் உகந்ததது. அடுத்தபடியாக ஆனி, ஆடி மாதங்களில் சுமாரான பலன்களைத் தரக் கூடியது. மற்ற மாதங்களில் மருந்துகள் செய்தால் தீமை பயக்கும். கிழமை: ஞாயிறு, திங்கள் மிகவும் நன்மைப் பயக்கும், அடுத்ததாக செவ்வாய்,வியாழன், வெள்ளி நாட்கள் சுமாரான பலன்களை தரும். புதன் மற்றும் சனி தீமை தரக்கூடியது ஆகும். நக்ஷத்திரம்: அசுவினி,கேட்டை,ஆயில்யம்,பூரட்டாதி மிகவும் உகந்ததது […]

Read More

ஒன்பதாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஒன்பதாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: செல்வம், மக்கட்பேறு, உறவினர் ஏற்படும் இறைபற்று மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்களை தூற்றுபவர், மிகுதியான தாகம் (நீர்வேட்கை) உள்ளவர். ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: இறைசெயல் மற்றம் பக்தியுடையவர், செல்வம், மக்கட்பேறு, அனைவரிடம் பணிவுடன் நடத்தல், எல்லோருக்கும் விருப்பமானவராக இருத்தல். ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் […]

Read More