ஒன்பதாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம், மக்கட்பேறு, உறவினர் ஏற்படும் இறைபற்று மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்களை தூற்றுபவர், மிகுதியான தாகம் (நீர்வேட்கை) உள்ளவர்.

ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இறைசெயல் மற்றம் பக்தியுடையவர், செல்வம், மக்கட்பேறு, அனைவரிடம் பணிவுடன் நடத்தல், எல்லோருக்கும் விருப்பமானவராக இருத்தல்.

ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தீய செயல்களை செய்தல், எவருக்கும் விருப்பமில்லாதவர், உயிர்கொலையில் நாட்டமுள்ளவர், தர்மமின்மை, கூடுதல் பாவர், அரசால் கிடைக்காத கௌரவம் உடையவர்.

ஒன்பதாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான செல்வமும், கல்வியும், நல் ஒழுக்கமும், திறமையாக பேசுதலும், திறன் படைத்தவரும், தர்மம் அறிந்தவரும் ஆவார். நல்ல பண்பாளராகவும் இருப்பார்.

ஒன்பதாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இறைசெயல் மற்றம் மூதாதையர்களுக்கு செய்யும் சடங்குகளில் பற்றுள்ளவர், புலவர், பெருஞ்செல்வம் உடையவர், அமைச்சர் அல்லது படைதலைவராவர், மரியாதைக்குரியவர்.

ஒன்பதாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சாமுத்திரிகா லட்சன குணமுள்ள உடலமைப்பு உள்ளவர், வரவு, செலவு, சமமாக பேணுபவர், பெண்களிடம் இன்பம், உறவினர் உள்ளவர், இறைவன், குரு, விருந்தாளிகளை வணங்குபவர், பெருந்தன்மை உடையவர்.

ஒன்பதாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தனது தர்மம், பொது தர்மம் இவை இரண்டையும் செய்யாமை, குறைந்த செல்வம் உடையவர், மக்கட்பேறும், உடன்பிறப்பும் இல்லாதவர், இன்பம் இல்லாதவர், பிறர் மனிதர்களை துன்பபடுத்தி சுகம் அனுபவிப்பவர்.

ஒன்பதாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சாதகமாகவும், இனிமையாகவும் பேசமாட்டார். தனது இனம் அல்லது ஊருக்கு தலைமை ஏற்பார். பெயர், புகழ் அடைவார்கள். தவறான செயல்கள் புரிவார்.

ஒன்பதாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பாவ வழியில் செல்பவர், தீய செயல் புரிபவர். தந்தை அற்றவர். அதிர்ஷ்டம் இல்லாதவர். கோபமும், வெறுப்பும் உடையவர் நல்லவர்களை அவதூறாகப் பேசுபவர்.

Related Posts

சூரியன்-ஜோதிஷி பார்வை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜயதுர்காவின் கருணையினாலே!! சூரிய மண்டலத்திலுள்ள அனைத்து கோள்களையும் சூரியன் ஒருங்கிணைத்து ஒரு சீரான சுழற்சிக்கு வழி ஏற்படுத்துகிறது. அதுபோலவே நாட்டை ஆள்பவர்களும் மக்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின்...
Read More

திருமணத்திற்கு குரு பலம் தேவையா?

Parasari Dr. B. Ayyappa Sharma
கிரஹங்கள் ஒரு ஜாதகத்தில் என்ன செய்யும் என்பதை அறிந்தாலும் அவை எப்போது அதனை செயல்படுத்தும் என்பதனை அறிவது இன்றியமையாதது ஆகும். கால நேரத்தை அறிய நிறைய உபாயங்களை...
Read More

மூன்றாமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma
மூன்றாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் ஆரம்பகாலத்தில் மற்றவர்களை அண்டி தொழில் செய்து அல்லது மற்றவர்களிடம் உத்தியோகம் பார்த்து ஜீவனம் செய்து பிறகு தன் சொந்த முயற்சியாலும்...
Read More