பத்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான திறமை, வீரம், செல்வம், வாகனம், உறவினர், மக்கட்பேறு உள்ளவர், தொடங்குகின்ற தொழில்களில் வல்லமையும், புகழும் பெயரும் உண்டு.

பத்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

எப்போதும் துன்பமின்மை, ஒரே செயலில் முழுக்கவனமும் செலுத்துதல், உடனுக்குடன் செயல்களை செய்து முடித்தல், செல்வ பெருக்கம், கூடுதல் வலிமையும், வீரராகவும், இரக்க குணமுள்ளவராகவும் இருப்பவர்.

பத்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அனைத்து செயல்களிலும் மகிழ்ச்சியுடன் காணப்படுதல், வீரம், மற்றவரால் எதிர்க்கப்படாதவர், முக்கியமான மனிதர்களால் சகவாசம் செய்பவர், மக்கட்பேறு, இன்பம், பெரும்புகழ் உடையவர்.

பத்தாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மேன்மையான அறிவுடையவர், செயல்களில் முழு ஈடுபாடு தொடங்குகின்ற செயலை பூர்த்தி செய்தல், வீரர், உண்மையுடையவர், அலங்கரித்து கொள்வதில் விருப்பமுள்ளவர், இன்பமுடையவர்.

பத்தாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தொடங்கிய செயலை விருப்பம் போல் பூர்த்தி செய்தல், அனைத்து வசதிகளுடன் கூடுதல் நன்மையும், இன்பமும், செல்வமும், மக்களும், சுகபோகமும், வாகனங்களும், புகழும் உடையவர்.

பத்தாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அறிவாளி, புகழுடையவர், கௌரவம் மற்றும் பற்பல தொழில்கள் மூலம் ஈட்டப்பட்ட பொருளும் இன்பமும், மனைவியும் மக்கட்பேறும் உள்ளவர், கவரக்கூடியவர், கலைத்துறையில் பிரகாசிப்பவர்.

பத்தாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வந்தர், புலவர், வலிமையுள்ளவர், அமைச்சர் அல்லது ஒரு நிர்வாக தலைவராக இருப்பார், சங்கம், கிராமம், நகரம், மற்றும் நாட்டிற்க தலைமை தாங்குபவர், சிறந்த நிர்வாகி

பத்தாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

புகழ் உடையவர், அச்சம் இல்லாதவர். குழந்தைகள் அதிகமாக இராது, பிறர் செயல்களில் ஈடுபடுபவர். நற்செயல் ஏதும் செய்யாதவர்.

பத்தாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நற்செயல்களில் தடை உள்ளவர். தூய்மை இல்லாதவர். தீய செயல் புரிபவர். தைரியம், புகழ், ஆற்றல் உடையவர்.

Related Posts

உத்ரகாலாமிருதம் எனும் ஜோதிஷ நூல் கூறும் கிரஹ காரகங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
சூரியன் : ஆத்மா, பலம், கண்டிப்பு. கோட்டை, நல்ல சக்தி, சூடு, ஒளி, தீ, சிவ வழிபாடு, தைரியம், முட்செடி, மரம். ஆரசாங்க ஆதரவு மற்றும் வெறுப்பு,...
Read More

பன்னிரெண்டாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
பன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: உடலில் ஊனம், ஒரு கண்ணிற்கு, பாதிப்பு ஏற்படும், தாழ்மையுணர்வு, மலட்டு பெண்ணின் கணவர், தந்தைக்கு பகைவர், வலிமையற்றவர், தாழ்ந்த...
Read More

பதினோராம் பாவத்தில் கிரகங்க இருப்பதால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
பதினோராம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: பெரும் பொருள் ஈட்டுதல், வலிமை, பிறரை மதியாமை, அடிமை பணி, நன்றியுடையவர், அடிமைகளை வெறுப்பவர், விருப்பமில்லாமை கொடுத்த பணிகளை...
Read More