பன்னிரெண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உடலில் ஊனம், ஒரு கண்ணிற்கு, பாதிப்பு ஏற்படும், தாழ்மையுணர்வு, மலட்டு பெண்ணின் கணவர், தந்தைக்கு பகைவர், வலிமையற்றவர், தாழ்ந்த எண்ணம் குணமும் நிறைந்தவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

எல்லோராலும் தூற்றப்படுபவர், தாழ்ந்த எண்ணம் உடையவர், கருமியாக இருப்பவர், கண்நோய், எதிலும் பற்றின்மை, உடல் ஊணம், வேறுமனிதரின் மகனாயிருத்தல் (தத்து பிள்ளை), அன்றாட செயலால் குறைவுடன் மற்றும் சோம்பலுடன் இருத்தல்.

பன்னிரெண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

கண்நோய், கண்களுக்கு கெடுதி ஏற்படுதல், ஒதுக்கப்பட்டவர், பெண்ணை வெறுப்பவர், நட்பாகி பின்னர் பகைகொள்ளுபவர், கொடூரன், செயல்களால் தோல்வி தழுவுதல், சிறைசாலை வாழ்க்கை அனுபவித்தல்.

பன்னிரெண்டாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நன்றாக தெளிவுடைய வார்த்தையை பயன்படுத்துதல், தோல்வி உள்ளவராகவும், சில வித்தை உடையவராகவும், பல துக்கங்களும் சோம்பலும், நோயும் உள்ளவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சோம்பலுடையவர், தகுதியற்ற மக்களால் ஒதுக்கப்படுதல், அனைவரையும் தூற்றுபவர், கண்டித்து பேசுதல், அனைத்து இடத்திலும் சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செயலாற்றவதில் சோம்பல், இன்பம் அனுபவித்தல், ஒதுக்கப்படுதல், விதவை பெண்களோடு கூடி சுகம் பெறுபவர், பலவகை உணவு உண்பவராகவும், கட்டில் மெத்தை போன்ற நல்ல வசதியுள்ள பொருட்களை சேகரிப்பவராகவும், பெண்களுக்கு அஞ்சுபவராகவும் இருப்பவார்.

பன்னிரெண்டாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உடலில் ஊனம், ஒதுக்கப்பட்டவர், கூடுதலாக பேசுபவர், ஒரேமாதிரி கண்களற்றவர், தயவு தாட்சியமற்றவர், கூச்சமில்லாதவர், தேவையில்லாமல் பணத்தையும், பொருட்களையும் கூடுதலாக செலவு செய்பவர், மிகுதியான மன குழப்பம் உடையவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இரகசியமாக தீய செயல்கள் செய்பவர். அதிகமாக செலவழிப்பார். நீரால் ஏற்படும் ஞிஸிளிறிஷிசீ எனும் உடல் வீக்கம் தரும் நோய் உள்ளவர்.

பன்னிரெண்டாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இரகசியமாக தீய செயல்கள் புரிபவர். அதற்காக பணம் செலவழிப்பவர். செல்வம் அழிவு, தீய நடத்தை, கண் நோய் உள்ளவர்.

1 Comment

  1. talk

    good

Leave A Comment

two + 16 =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்காவினை வணங்கி, கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார். இதன் பொருள். உட்ச கிரஹம் முழு பலனையும், மூலத்திரிகோண கிரஹம் முக்கால் பலத்தினையும், ஆட்சி கிரஹம் பாதிபலத்தினையும், நட்பு கிரஹம் கால் பலத்தினையும், சமம் கிரஹம் எட்டில் ஒரு பங்கு பலத்தினையும், நீட்ச/பகை கிரஹம் […]

Read More

கிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது?

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும். சூரியன்–22 வயது சந்திரன்–24 வயது செவ்வாய்–28 […]

Read More